டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க திருடி… காவலாளியைக் கொன்ற சிறுவர்கள்!

tasmac

மதுரை வாடிப்பட்டி அருகே அரசு மதுபானக்கடையில் காவலாளியை கொலைசெய்து கிணற்றில் வீசிய கொலையாளிகள் கைது செய்யப் பட்டனர். கொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஜெமினிபட்டியில்
அரசு மது பானக்கடை உள்ளது. இங்கு கடந்த மாதம் 20 ம் தேதியன்று இரவில் கச்சைகட்டியை சேர்ந்த காவலாளி கணேசன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலுள்ள தென்னந்தோப்பு கிணற்றுக்குள் கொலை செய்யபட்டு கிடந்தார். மேலும் கடையை துளையிட்ட மர்மநபர்கள் 10 மதுபான பாட்டில்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில்
தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்த போது சந்தேகப் படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அலங்காநல்லூர் நேதாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வகணபதி(19) என்றும், மதுரை மாவட்டத்தில் பல வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவந்ததாம். மேலும் கடந்த மாதம் வாடிப்பட்டி அருகே மதுபானக்கடை சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடியபோது காவலாளி கணேசன் தடுத்ததால், அவரை கொலை செய்ததாகவும், காவலாளி சத்தம் போடாமல் இருக்க ஆடு, மாடு திருடுவதற்கு பயன்படுத்தும் டேப்பால் வாயிலும் கை, கால்களிலும் கட்டி தூக்கி சென்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசிவிட்டு சென்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 17 வயது சிறுவனை இளஞ்சிறார் நீதிக் குழுமத்திலும், செல்வகணபதியை வாடிப்பட்டி நீதிமன்றத்திலும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories