சென்னை: உச்ச நீதிமன்றத்தில் இன்று அடிப்படைக் கருத்துரிமை தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவு மிகவும் பலவீனமாக கட்டமைக்கப்பட்டதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது என்றும், இதன் மூலம் இந்தப் பிரிவு தவறாக கையாளப் பட வாய்ப்பு இருப்பதாகவும், தவறாகக் கையாளப்பட்டதாகவும் கூறியுள்ளார். பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரானதாக இது இருந்துள்ளது. தற்போதைய நடைமுறைச் சட்டங்களின் மூலம் இது தொடர்பான தண்டனைகளைப் பெற்றுத் தர வாய்ப்பு உள்ளது. தற்போதைய சட்டப் பிரிவையே மேலும் வலுப்படுத்த யோசிக்கலாம், ஆனால் 66ஏ அதற்கான பதில் அல்ல என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
66ஏ சட்டப்பிரிவு ரத்து: ப.சிதம்பரம் வரவேற்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

