February 8, 2025, 8:41 PM
28.2 C
Chennai

வைகை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டு விழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

vaigai-aiyappan-araattu
vaigai-aiyappan-araattu

சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டு விழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சபரி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மார்கழி மாதம் உற்சவம் நடைபெற்றது. இங்கு சிவாச்சாரியார் கண்ணன் குழுவினரால் யாக பூஜை ஹோமங்கள் பல்வேறு பாராயணங்கள் வேதங்கள் ஓதி பூஜை நடைபெற்றது.

பின்னர் ஐயப்பன் அலங்கார பூஜையில் அனைவருக்கும் அருள்பலித்தார் பிறகு ஐயப்பன் ஆராட்டு விழாவை முன்னிட்டு சுவாமி புஷ்ப அலங்காரத்தில்  கேரளா செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக தென்கரையில் இருந்து புறப்பட்டு சோழவந்தான் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

அங்கு ஏராளமான பக்தர்கள் புடைசூழ சுவாமி வைகை ஆற்றில் இறங்கினார் பக்தர்கள் சரண கோஷம் முழங்க ஐயப்பனை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். பின்னர் சிவாச்சாரியார் கண்ணன் குழுவினர் ஐயப்பன் சுவாமிக்கு பால் தயிர் நெய் மஞ்சள் குங்குமம் உட்பட 18 வகை வாசனை திரவியங்களால் வேதங்கள் முழங்க வைகை ஆற்றில் ஆராட்டு விழா கோலாகலமாக நடந்தது.

அப்போது வானில் கருடன் வட்டமிட பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமிக்கு பல்வேறு நைவேத்தியங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி யானையில் அமர்ந்து நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி கோவில் வந்தடைந்தார்.

பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள்சிறப்பு பூஜைகள் செய்து அருள் பெற்றனர், ஏற்பாடுகளை தென்கரை அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories