எய்ம்ஸ்.,! அமைச்சர் ஒரு எய்ம்மோட பதில் சொல்ல… நிலம் கையகப் படுத்தல்ல சிக்கல்னு அரசு சொல்ல… இன்னாங்கடா நடக்குது இங்க?!

aiims
aiims

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது, அதற்கான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப் படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கையப் படுத்தல் தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான 2 நோட்டீஸ்களுக்கு தமிழக அரசு தற்போது வரை பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட, உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ALSO READ: எய்ம்ஸ்-க்கான இடம் ஒப்படைக்கப் பட்டது; ஆவணங்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்!

இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

ALSO READ: எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தயாராகிவிடும், எதிர்க்கட்சியினர் இலவசமாக அதில் உலகத் தர சிகிச்சை எடுக்கலாம் என்று தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களுடனான பேட்டிகளின் போது கூறி வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைக் கையகப் படுத்தித் தரவில்லை என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories