எய்ம்ஸ்.,! அமைச்சர் ஒரு எய்ம்மோட பதில் சொல்ல… நிலம் கையகப் படுத்தல்ல சிக்கல்னு அரசு சொல்ல… இன்னாங்கடா நடக்குது இங்க?!

aiims
aiims

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது, அதற்கான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப் படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கையப் படுத்தல் தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான 2 நோட்டீஸ்களுக்கு தமிழக அரசு தற்போது வரை பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட, உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ALSO READ: எய்ம்ஸ்-க்கான இடம் ஒப்படைக்கப் பட்டது; ஆவணங்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்!

இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

ALSO READ: எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தயாராகிவிடும், எதிர்க்கட்சியினர் இலவசமாக அதில் உலகத் தர சிகிச்சை எடுக்கலாம் என்று தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களுடனான பேட்டிகளின் போது கூறி வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைக் கையகப் படுத்தித் தரவில்லை என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories