பாளை.,யில் நக்ஸலைட்டுகள் மாநாடு! தடை கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு!

complaint-by-thamizhaga-pathukappu-iyakkam
complaint-by-thamizhaga-pathukappu-iyakkam

பாளை.,யில் நடைபெறுவதாக உள்ள நக்ஸலைட்டுகள் மாநாட்டைத் தடை செய்யக் கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குறிப்பிட்ட போது…

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் டிச.27 ஆம் தேதி பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு என்ற பெயரில் நக்ஸலைட்டுகள், தேச விரோதிகள் கூட்டம் நடத்தவுள்ளனர். இந்த விழா ஒருங்கிணைப்பாளரான தே.ஜோதி என்ற பெண், அண்மையில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் வேல்முருகன் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது குடும்பத்தினரை சந்தித்து உதவி செய்து வரும் நக்ஸல்! இவரது பேஸ்புக் பதிவுகள் எல்லாம் துப்பாக்கிக் கலாசாரத்தை ஆதரித்தும் தேசத்திற்கு எதிரான வகையிலும் உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் திமுக உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக மாநாடு நிறைவுரை மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார்.

எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ், முசுலீம் லீக் நவாஸ்கனி , வேல்முருகன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பதாக வுள்ளனர்.

நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சி.எஸ்.ஐ டயோசிசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபம் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி நக்சல்கள் பயங்கரவாதிகளுடன் திமுக கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியை, தேச விரோத நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி இந்தப் புகார் மனுவை, நெல்லை காவல் ஆணையரிடம் அளித்துள்ளோம்… என்று குறிப்பிட்டார் தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முத்துராஜ்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன், தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி முருகன் மற்றும் விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக்கனி ஆகியோர் உடன் இருந்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories