உதயநிதி கலந்து கொள்ளும் தேசப் பிரிவினைவாதிகள் மாநாட்டை அனுமதிக்கக் கூடாது: இந்து முன்னணி தீர்மானம்!

hindumunnani vpjeyakumar misasoman kumari - 2026
file picture

இந்து முன்னணி அமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விளாத்திகுளம் ஸ்ரீராம் அலுவலகம் மாடியில் வைத்து ஒன்றிய தலைவர் S.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் S.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

தீர்மானம் 1:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு நடைபெற உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளர் திருமதி தே.ஜோதி.

இவர் சமீபத்தில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிர நக்சலைட் வேல்முருகனின் தீவிர ஆதரவாளர். திருமதி ஜோதி அவர்களும் நக்சலைட் உடன் தொடர்பு உடையவர். இவரது கருத்துக்கள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஆதரித்தும் தேசத்திற்கு எதிராகவும் உள்ளது. சி.எஸ்.ஐ. டயோசீசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு எஸ்டிபிஐ முபாரக், விடுதலை சிறுத்தை கட்சி ஆளூர் ஷாநவாஸ், முஸ்லிம் லீக் நவாஸ் கனி, வேல்முருகன், சுபவீரபாண்டியன், உட்பட இதன் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்கிறார். நிறைவுரையாக மு க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சியாக உரையாற்றுகிறார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரான திரு மு க ஸ்டாலின் அவர்கள் இந்தக் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திமுக கட்சி தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்கக்கூடாது என்று இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு தமிழக காவல்துறையும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் வணிக வளாகம் என்ற பெயரில் நகராட்சி அனுமதி பெற்று வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் சத்திய முழக்கம் அசம்பிளி ஆப் சர்ச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மத வழிபாடு என்ற போர்வையில் இந்து மதத்தை கொச்சை படுத்தி பேசுகின்றனர்.

சுயமாக சிந்திக்கத் தெரியாத சிறு குழந்தைகளை அழைத்து அவர்களிடம் இந்து கடவுள்களை சாத்தான் என்றும் இயேசு தான் உண்மையான கடவுள் என்றும் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கோவில்பட்டி நகர இந்து முன்னணி 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முறையாக அனுமதி இல்லாமல் மதப்பிரச்சாரம் செய்யும் இடத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனால் 10/10/2020 சனிக்கிழமை அன்று மாலை திருமதி விஜயா கோட்டாட்சியர் அவர்கள் அழைப்பானை கொடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத காரணத்தினால் 14/10/2020 புதன் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இதுநாள் வரை கோட்டாட்சியர் அவர்கள் எங்களை அழைத்துப் பேசவில்லை. நாங்கள் சந்தேகப்பட்டு திருமதி விஜயா அவர்கள் எந்த மதம் என்று பார்த்ததில் அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. ஆகையால் திருமதி விஜயா அவர்கள் மத ரீதியில் செயல்படுகிறார் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக கவனம் செலுத்தி முறையாக அனுமதி இல்லாமல் செயல்படும் சர்ச்சை தடைசெய்ய இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories