கார் அனுப்புறேன்… வந்து சாப்டுப் போங்க! முதல்வரிடம் இருந்து விவசாயிக்கு வந்த அழைப்பு!

Published:

kcr-telangana
kcr-telangana

கார் அனுப்புகிறேன்… வந்து ஒருவேளை தங்கி சாப்பிட்டு செல்ல வேண்டும்… கேசிஆரிடமிருந்து ஆந்திரா விவசாயிக்கு அழைப்பு.

தெலங்காணா முதல்வரின் பார்வையை ஈர்த்த ஆந்திராவின் ஆதர்ச விவசாயி. போன்செய்து போஜனத்திற்கு அழைத்த தெலங்காணா முதல்வர்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு தெலங்காணா முதல்வர் சந்திரசேகர ராவு போன் செய்து பாராட்டி விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த விவசாயியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தெலங்காணா முதல்வர் கேசிஆர் தனக்கு சனிக்கிழமை போன் செய்து தன்னோடு பேசினார் என்று அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணா மாவட்டம் கண்டசாலா மண்டலம் கண்டசாலபாலெம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதர்ச விவசாயி உப்பல பிரசாத்ராவுக்கு சனிக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு தெலங்காணா முதல்வர் கேசிஆரிடம் இருந்து போன் வந்தது.

ஸீடிரில் என்ற நவீன இயந்திரத்தை உபயோகித்து நேரடியாக நிலத்தில் விதை விதைக்கும் முறை குறித்து விவசாயி பிரசாத்ராவிடம் கேட்டு விவரங்கள் அறிந்து கொண்டார் தெலங்காணா முதல்வர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

தன்னுடைய 35 ஏக்கர் நிலத்தில் சீடிரில் எந்திரம் மூலம் ‘வெத முறை’ என்று கூறப்படும் நேரடியாக விதைகளை நாட்டும் முறைப்படி சன்ன ரகம் நெல் சாகுபடி செய்ததாகவும் ஒரு ஏக்கருக்கு 40 லிருந்து 45 மூட்டை மகசூல் சாதித்ததாகவும் பிரசாத்ராவு தெரிவித்தார்.

இதுகுறித்து கேட்டு அறிந்து கொண்ட தெலங்காணா முதல்வர், தெலங்காணாவுக்கு வரவேண்டும் என்று அழைத்து தெலங்காணாவில் உள்ள விவசாய நடைமுறைகளை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

விரைவில் கார் அனுப்புவதாகவும் தெலங்காணாவின் விவசாய நடைமுறையை பரிசீலிக்க வேண்டும் என்றும் ஒருவேளை தங்கி போஜனம் செய்து செல்ல வேண்டுமென்றும் பிரசாத ராவுக்கு கேசிஆர் அழைப்பு விடுத்துள்ளார்.

கேசிஆரிடமிருந்து போன் வந்ததால் பிரசாத்ராவை பல விவசாயிகள் பாராட்டி வருகிறார்கள்.

பல கடினமான நிலைகளை தாண்டி வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி உள்ளார் விவசாயி பிரசாத் ராவ். கடந்த 32 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் இவர் இரண்டு ஏக்கர் நிலமும் 2 எருதுகளுமாத விவசாயத்தை ஆரம்பித்தார். தற்போது 200 ஏக்கராக உயர்ந்துள்ளது. விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் நடத்திவருகிறார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

1982ல் படித்து வரும்போதே விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். தந்தையின் அனுமதி பெற்று விவசாயத்தில் அடியெடுத்து வைத்த பிரசாத ராவ் மிகவும் சிரமப்பட்டு வெற்றி அடைந்துள்ளார்.
ஆர்கானிக் முறையில் புல் வளர்த்து கால்நடைகளுக்கு போடுவதால் நல்ல பால் உற்பத்தியும் வருவதாக கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் தன்னுடைய ஆதர்சம் என்று கூறும் இவர் பல சிரமங்களை எதிர்கொண்டு முன்னேறியுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img