தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆய்வு!

election-commission
election-commission

தலைமைத் தேர்தல் ஆணையக் குழு இன்று சென்னை வருகிறது. சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகிறது. சட்டசபை தேர்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம், வரும் மே மாதம் நிறைவடைகிறது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான, உயர்மட்ட அதிகாரிகள் குழு இரண்டு நாள் பயணமாக, இன்று சென்னை வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீஹார் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மாலே மாலிக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

சட்டசபை தேர்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் உடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.

தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் தேர்தல் ஆணையக் குழுவினர் நாளை ஆலோசிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி செல்லும் இக்குழுவினர், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories