வைகுண்ட ஏகாதசி; திருவரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு!

srirangam-paramapathavasal-open
srirangam-paramapathavasal-open

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையான தலமாகப் போற்றப் படும் திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், இன்று காலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு  தரிசனம் அளித்தார்.

திருச்சி, திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, கடந்த 14ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

namperumal-mohini1-morning
namperumal-mohini1-morning

பகல்பத்து உத்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். நம்பெருமாளின் நாச்சியார் திருக்கோலமான மோகினி அலங்கார சேவை  சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப் படுகிறது. 

namperumal-morn
வைகுண்ட ஏகாதசித் திருநாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளிய போது…

தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசித் திருநாளான இன்று அதிகாலை 3:30க்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், அதிகாலை 4:55க்கு பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் கடந்தார்.  

namperumal-paramapathavaal
ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா. நம்பெருமாள்
இராப்பத்து..முதலாம் திருநாள் 25.12.2020 காலை ரத்தின அங்கியில் …

முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையைக் காரணம் காட்டி, நேற்று மாலை 6 மணி முதலே தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க காவல் துறையினர் மறுத்தனர். இதனால் இன்று காலை பரமபத வாசல் திறப்புக்கு பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
namperumal-ayirangal-mandapam
ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா. நம்பெருமாள்
ஏகாதசி நாள் ஆயிரம் கால் மண்டபத்தில் இராப்பத்து.. முதலாம் திருநாள் 25.12.2020 காலை ரத்தின அங்கியில் …

நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து செல்லும் போது, அவர் பின் தொடர்ந்து செல்வதை வாழ்வின் பாக்கியமாக பக்தர்கள் கருதுவர். இருப்பினும்,  ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய பின் இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள், பரமபத வாசல் வழியாக செல்வதற்கும், நம்பெருமாளை தரிசிப்பதற்கும் அனுமதிக்கப் படுகின்றனர்.

ரங்கனாதமனிசம் ‐ வந்தஸ்ரீ
நாரத*ததி முனிகண வந்த்யமான சோபனீயமதி ஸூந்தர முகார விந்த (ர)

மங்கள கர நிஷ்களங்க தக்ஷிண
மந்தாகினி காவேரி மத்யஸ்தம்
சங்க சக்ர கதா பத்ம தர ஹஸ்தம்
ஸரஸிஜ விகஸித தளவர நேத்ரம் ஜலத கர மரகத வர்ண காத்ரம்
ஜனன மரண பய சமன பவித்ரம் ஜலஜஸம்பவ ஸன்னுத சரித்ரம் (ர)

லாவண்ய பத ஸேரோருஹம் ‐ ஸ்ரீ
ராஜேயாக தர்சன ஸந்தோஹம்
பாவ மதுர ஸரஸம் ப்ராவஹம்
பக்தோ*ஸவ பரமானந்த தேஹம்
ஸேவித நிஜஜன வரவிகோஷணம் ஸ்ரீகர ரசித ருசிர விபுஷணம்
ஸௌவித விஹங்க போகி பாஷணம் ஸன்னுத லங்காதிப விபீஷணம் (ர)

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories