சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

69. அறிவுள்ள நண்பன்!

ஸ்லோகம்:

மனீஷிணஸ்ஸந்தி ந தே ஷிதைஷிணோ
ஷிதைஷிணஸ்ஸந்தி ந தே மனீஷிண: |
சுஹ்ருச்ச வித்வானபி துர்லபோ ந்ருணாம் 
யதௌஷதம் ஸ்வாது ஹிதம் ச துர்லபம் ||
— போஜ சரித்திரம் 

பொருள்:

உலகில் அறிவாளிகள் உண்டு. ஆனால் அவர்கள் நம்  நன்மையை விரும்பாதவர்களாக இருக்கலாம். நம் நன்மையை விரும்புபவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம். அறிவோடு கூடிய நண்பர்கள் கிடைப்பது அரிது. இனிப்பாகவும் இருந்து நோயையும் தீர்க்கும் மருந்து கிடைப்பது அரிது.

விளக்கம்

எதேச்சையாக சந்தித்த இருவர் படிப்படியாக நண்பர்களாவர். உள்ளத்தில் நல்லெண்ணம் உள்ளவர்களே நண்பர்கள். அப்படிப்பட்ட நண்பன் நம் மேன்மையை விரும்புபவனாகவும் அறிவாளியாகவும் இருந்தானென்றால் எத்தனை நன்றாக இருக்கும்… என்பதை தெரிவிக்கும் சுலோகம் இது.

நம் நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

நம் நலத்தை விரும்புபவன் அறிவில்லாதவனானாலும் அறிவுத் திறன் உள்ளவர் நம் நலனை விரும்பாதவரானாலும் பலன் இருக்காது. இரு நற்குணங்களும் உள்ளவர் மிக அரிதாகவே கிடைப்பார். அவர்களுக்காக தேட வேண்டும். வெறும் நலம் விரும்பியாக இருந்தாலும் போதாது.

அது தொடர்பான கதை ஒன்று உண்டு. ஒரு வணிகன் குரங்கு ஒன்று வளர்த்தான். தன் முதலாளியின் நலம் விரும்பியான அந்த குரங்கு வணிகனைப்  பாதுகாத்து வந்தது. ஒருநாள் வணிகன் உறக்கத்தில் இருந்தபோது ஒரு ஈ  அவன் முகம் மீது அடிக்கடி வந்து அமர்ந்தது. முதலில் குரங்கு அதனை விரட்டியது. ஆனால் பின்னர் எரிச்சலடைந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அடித்தது.  அவன் முகத்தில் பெரும் காயத்தோடு உயிர் தப்பினான். குரங்கின் அறியாமை வணிகனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது.

நலம் விரும்பி அறிவற்றவனாக இருந்தால் வரும் அபாயத்தை விளக்கும் கதை இது.  அறிவுள்ளவன் நண்பனாக கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories