சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

69. அறிவுள்ள நண்பன்!

ஸ்லோகம்:

மனீஷிணஸ்ஸந்தி ந தே ஷிதைஷிணோ
ஷிதைஷிணஸ்ஸந்தி ந தே மனீஷிண: |
சுஹ்ருச்ச வித்வானபி துர்லபோ ந்ருணாம் 
யதௌஷதம் ஸ்வாது ஹிதம் ச துர்லபம் ||
— போஜ சரித்திரம் 

பொருள்:

உலகில் அறிவாளிகள் உண்டு. ஆனால் அவர்கள் நம்  நன்மையை விரும்பாதவர்களாக இருக்கலாம். நம் நன்மையை விரும்புபவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம். அறிவோடு கூடிய நண்பர்கள் கிடைப்பது அரிது. இனிப்பாகவும் இருந்து நோயையும் தீர்க்கும் மருந்து கிடைப்பது அரிது.

விளக்கம்

எதேச்சையாக சந்தித்த இருவர் படிப்படியாக நண்பர்களாவர். உள்ளத்தில் நல்லெண்ணம் உள்ளவர்களே நண்பர்கள். அப்படிப்பட்ட நண்பன் நம் மேன்மையை விரும்புபவனாகவும் அறிவாளியாகவும் இருந்தானென்றால் எத்தனை நன்றாக இருக்கும்… என்பதை தெரிவிக்கும் சுலோகம் இது.

நம் நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

நம் நலத்தை விரும்புபவன் அறிவில்லாதவனானாலும் அறிவுத் திறன் உள்ளவர் நம் நலனை விரும்பாதவரானாலும் பலன் இருக்காது. இரு நற்குணங்களும் உள்ளவர் மிக அரிதாகவே கிடைப்பார். அவர்களுக்காக தேட வேண்டும். வெறும் நலம் விரும்பியாக இருந்தாலும் போதாது.

அது தொடர்பான கதை ஒன்று உண்டு. ஒரு வணிகன் குரங்கு ஒன்று வளர்த்தான். தன் முதலாளியின் நலம் விரும்பியான அந்த குரங்கு வணிகனைப்  பாதுகாத்து வந்தது. ஒருநாள் வணிகன் உறக்கத்தில் இருந்தபோது ஒரு ஈ  அவன் முகம் மீது அடிக்கடி வந்து அமர்ந்தது. முதலில் குரங்கு அதனை விரட்டியது. ஆனால் பின்னர் எரிச்சலடைந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அடித்தது.  அவன் முகத்தில் பெரும் காயத்தோடு உயிர் தப்பினான். குரங்கின் அறியாமை வணிகனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது.

நலம் விரும்பி அறிவற்றவனாக இருந்தால் வரும் அபாயத்தை விளக்கும் கதை இது.  அறிவுள்ளவன் நண்பனாக கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்!

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories