சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

69. அறிவுள்ள நண்பன்!

ஸ்லோகம்:

மனீஷிணஸ்ஸந்தி ந தே ஷிதைஷிணோ
ஷிதைஷிணஸ்ஸந்தி ந தே மனீஷிண: |
சுஹ்ருச்ச வித்வானபி துர்லபோ ந்ருணாம் 
யதௌஷதம் ஸ்வாது ஹிதம் ச துர்லபம் ||
— போஜ சரித்திரம் 

பொருள்:

உலகில் அறிவாளிகள் உண்டு. ஆனால் அவர்கள் நம்  நன்மையை விரும்பாதவர்களாக இருக்கலாம். நம் நன்மையை விரும்புபவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம். அறிவோடு கூடிய நண்பர்கள் கிடைப்பது அரிது. இனிப்பாகவும் இருந்து நோயையும் தீர்க்கும் மருந்து கிடைப்பது அரிது.

விளக்கம்

எதேச்சையாக சந்தித்த இருவர் படிப்படியாக நண்பர்களாவர். உள்ளத்தில் நல்லெண்ணம் உள்ளவர்களே நண்பர்கள். அப்படிப்பட்ட நண்பன் நம் மேன்மையை விரும்புபவனாகவும் அறிவாளியாகவும் இருந்தானென்றால் எத்தனை நன்றாக இருக்கும்… என்பதை தெரிவிக்கும் சுலோகம் இது.

நம் நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.

நம் நலத்தை விரும்புபவன் அறிவில்லாதவனானாலும் அறிவுத் திறன் உள்ளவர் நம் நலனை விரும்பாதவரானாலும் பலன் இருக்காது. இரு நற்குணங்களும் உள்ளவர் மிக அரிதாகவே கிடைப்பார். அவர்களுக்காக தேட வேண்டும். வெறும் நலம் விரும்பியாக இருந்தாலும் போதாது.

அது தொடர்பான கதை ஒன்று உண்டு. ஒரு வணிகன் குரங்கு ஒன்று வளர்த்தான். தன் முதலாளியின் நலம் விரும்பியான அந்த குரங்கு வணிகனைப்  பாதுகாத்து வந்தது. ஒருநாள் வணிகன் உறக்கத்தில் இருந்தபோது ஒரு ஈ  அவன் முகம் மீது அடிக்கடி வந்து அமர்ந்தது. முதலில் குரங்கு அதனை விரட்டியது. ஆனால் பின்னர் எரிச்சலடைந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அடித்தது.  அவன் முகத்தில் பெரும் காயத்தோடு உயிர் தப்பினான். குரங்கின் அறியாமை வணிகனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது.

நலம் விரும்பி அறிவற்றவனாக இருந்தால் வரும் அபாயத்தை விளக்கும் கதை இது.  அறிவுள்ளவன் நண்பனாக கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories