அறநிலையத் துறையைக் கண்டித்து திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி கூட்டுப் பிரார்த்தனை!

hindu-munnani
hindu-munnani

இந்துக்களின் கோரிக்கையை வலியுறுத்தி இறைவன் முன் வேண்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறது இந்து முன்னணி அமைப்பு.

சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் முன், இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இன்று (26 ஆம் தேதி) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற இருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கோரிக்கை 1: ஒவ்வொரு ஆண்டும் சுவாமி வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்தாண்டு கொரானாவை காரணம் காட்டி, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இதுவரையில் எந்த ஏற்பாடும் செய்யாமல் உள்ளது கவலை அளிக்கிறது.

தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மற்ற மதங்களின் வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை, அரசியல் கட்சிகளின் பொதுகூட்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அரசு தளர்வுகள் ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே, இந்த ஆண்டு வழக்கம் போல சுவாமி புறப்பாடு நடத்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

கோரிக்கை 2 : பெருமாள் கோவில்களில் தரும் துளசி தீர்த்தம் என்பது நோய் தீர்க்கும் மருந்து. இது சமய நம்பிக்கையும் ஆகும். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படாமல் உள்ளது. உடனே பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோரிக்கை 3: மார்கழி மாதம் எனும் தனுர் மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வது விசேஷம்.  ஆனால், இந்து சமய அறநிலைத்துறை கோவிலின் உள்ளே கம்பிகளை அமைத்து, சுவாமி தரிசனம் செய்ய விடாமல், கோவிலை சுற்றி வர விடாமல் தடுக்கின்றனர்.

கோவிலின் உள்ளே போடப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றி பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புடன் சுவாமியை சுற்றி வர அனுமதி அளிக்க வேண்டும்.

கோரிக்கை 4: வைணவத்தின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில். இங்கு பாராயணம் செய்யப்பட்டு வந்த நிலையில் தவறான அணுகுமுறையால், பூட்டிய கதவின் முன் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இது போன்ற கொடும் செயல்கள் நிறுத்தப்பட்டு பாராயணம் சிறப்பாக நடைபெற இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல புத்தியை வழங்க பார்த்தசாரதி பெருமாளிடம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருக்கிறது.

மத்திய சென்னை மாவட்டம் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிகளின் சார்பில் 26.12.2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்  வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமை தாங்குகிறார். மாநகர, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், பக்தர்கள் குடும்பத்துடன் இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்று இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories