பேராசிரியர் தொ.பரமசிவம்: தமிழ் ஆய்வு உலகுக்கு ஓர் இழப்பு!

tho-paramasivam
tho-paramasivam

தமிழறிஞர் தொ. பரமசிவம் உடல் நலம் இல்லாமல்
23.12.2020 நாளன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்தார் என்பது தமிழ் ஆய்வு உலகின் இழப்பு.

அவருக்கு முதல் அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், ஆசிரியர் கி. வீரமணி, நடிகர் கமலஹாசன், தோழர் நல்லக்கண்ணு, வை. கோ. சீமான்( மாணவர்) முதலிய பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது தமிழுக்கும், தமிழர்களுக்கும் செயத மரியாதையாக் கருதுகிறேன். அத்துடன் திருநெல்வலி மாவட்ட ஆட்சியர், அமைச்சருடம் அரசு மரியாதை செய்த தமிழக அரசுக்கும் என் பாராட்டுக்கள்.

இந்தியா அரசு இந்திய மொழி எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் வாழும் காலத்தில பராமரிக்க வேண்டும்; காரணம் அவர்கள தான் ஒரு நாட்டின் அறிவுச் சொத்து. அவர்களின் எழுத்துகள் காலம் கடந்தும் பேசப்படும் பண்பாட்டின் சமூக வாழ்வின் அடையாளங்கள்.

பேராசிரியர் தொ. ப காரைக்குடியில் படித்த முன்னாள் மாணவர், இளையான்குடி, தியாகரசர் கல்லூரிகளில் பணியாற்றிய
பின் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவாரகப் பணிநிறைவு பெற்றவர்.

அவர் ஓய்வுக்குப்பின்னும் ஓய்வின்றி ஆய்வுகளை இறுதி மூச்சு வரை செய்தவர். தமிழக ஆய்வு. வரலாற்றில் ஆராய்ச்சி இதழ் நடத்தி நாட்டார், பண்பாட்டியல், சமூகவியல் திறனாய்வை வளர்த்த நா. வானமாமலைக்குப் பின் அந்த ஆய்வைத் தொடர்ந்து தமிழின் தொன்மங்களை, பண்பாட்டுக்கூறுகளை ஆராய்ந்தவர்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எழுத்து என்பது மக்களை மையமிட்டதாக இருக்கும். அதில் அரசு பற்றிய விமர்சனம் எல்லாக் காலத்திலும் இருக்கும். அதைச் அரசு சரியாகப் புரிந்து கொண்டு எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை வாழும் காலத்தில்
பாதுகாத்து வர வேண்டும்.

நம் தமிழ் மரபில் அதியமான் சாகா வரம் தரும் நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாமல் தமிழ் வளைக்கும் ஓளவையாருக்குத் தான் கொடுத்தான். ஒளைவையாரும் அரசனின் வரிக்கொடுமையை எதிர்த்துப் பாடினார். அதை உணர்ந்த அரசன் வரியை நிறுத்தி விட்டு ஒளவையாரைப் போற்றினான்.

தமிழக அரசு பேராசியர் தொ. பரமசிவம் அவர்களின் ஆய்வுநூல்களை நாட்டுடமையாக்கி அக்குடும்பத்துக்கு
உச்சமான நிதி கொடுத்து கெளரப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் உறவுடன்
பேராசிரியர் பெ. சுபாசு சந்திர போசு
முன்னாள் மாணவர்,
அழகப்பா கல்லூரி
26.12.2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories