புதுக்கோட்டையில் ஆருத்ரா தரிசனம்! பக்தர்கள் பங்கேற்பு!

Published:

pudukottai-santhananda-swamigal-arudhra-darshan1a
pudukottai-santhananda-swamigal-arudhra-darshan1a

புதுக்கோட்டை   சாந்தநாத சுவாமி  திருக்கோவிலில்,  வேட்டைப்பெருமாள் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை  சாந்தநாத சுவாமி  திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பழங்கள்,  இளநீர், சந்தனம் விபூதி, அரிசி மாவு, மஞ்சள் , திரவியம்,  உள்ளிட்ட  அபிஷேகங்கள் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும்  செய்யப்பட்டன.

pudukottai-santhananda-swamigal-arudhra-darshan
pudukottai-santhananda-swamigal-arudhra-darshan

பின்னர்  நடராஜர் வெள்ளி  அங்கி மலர் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

இதேபோன்று பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள வேட்டைப் பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையொட்டி சிறப்பு ருத்ரஹோமம் சந்தோஷ் சாஸ்திரிகள்  தலைமையில்  நடைபெற்றது  

இதில்   கணபதி பூஜை,  புண்யாஹ வாசனம்,  பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம்,  பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை, லெட்சுமிபூஜை  . மற்றும்  சிறப்பு ஹோமம்  மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!
pudukottai-santhananda-swamigal-arudhra-darshan2
pudukottai-santhananda-swamigal-arudhra-darshan2

தொடர்ந்து   நடராஜருக்கும்,சிவகாமி அம்பாளுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம்   தீபா ஆராதனை நடைபெற்றது

நிகழ்வில் முன்னாள் எம் எல்  ஏ நெடுஞ்செழியன் எ ஸ் வி எ ஸ் மோட்டார்ஸ் ஜெயக்குமார்  புதுக்கோட்டைஜோதிடர் டாக்டர் கே.வி.செல்வராஜ்   ,சுந்தரம் சிவனடிகளார் அண்ணாமலை பட்டிமன்ற பேச்சாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

  • செய்தி: டீலக்ஸ் சேகர் , புதுக்கோட்டை

Related articles

Recent articles

spot_img