ஆய்வுக்கு அதிகாரம் உண்டு: விமர்சிக்கும் கட்சிகள், ஊடகங்களுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :

ஆளுநரின் செயல்பாடு பற்றி விமர்சிப்பது சட்ட விரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படியே ஆளுநரின் ஆய்வு நடத்தப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆளுநர்தான். மாநில நிர்வாகத்தின் அனைத்துத் தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதுபோல மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது. ஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப் பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன.

நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது.

அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநரின் அலுவலகத்தை மரியாதைக் குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • பொதுமக்கள் நலன் கருதியும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் வகையில் ஊக்குவிக்கவும் ஆளுநர் செயலாற்றி வருகிறார்.
  • அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்புவது சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிப்பது.
  • தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது.
  • அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநர் உள்ளார்
  • ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது

#RajBhavan #GovernorInspection #BanwarilalPurohit

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories