சென்னை: தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, ‘சைவம்’ திரைப்படத்தில் நான் எழுதிய ‘அழகே அழகு’ பாடலுக்காக 2014ஆம் ஆண்டின் தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது. அன்பையும், மனிதநேயத்தையும் குழைத்து எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்நேரத்தில் சைவம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விஜய், இசையமைப்பாளர் தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் பாடலைப் பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணன், தேர்வுக்குழுத் தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்… என்றார்.
மீண்டும் தேசிய விருது: நா.முத்துக்குமார் மகிழ்ச்சி
Popular Categories