மதுரை… விபத்து.. மரணம்… க்ரைம்!

crime-beat
crime-beat

மதுரை டவுன்ஹஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்

மதுரை ஜன 17 டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்..

அலங்காநல்லூர் புது பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் 64 .இவர் சொந்த வேலையாக மதுரைக்கு வந்திருந்தார் .டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற போது திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து பலியானார் இவரது சாவு குறித்து மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பேக்கரி உரிமையாளரிடம் 72,000 ஒரு பவுன் நகை திருட்டு வியாபாரம் செய்தபோது கைவரிசை

மதுரை ஜன 17: ஆரப்பாளையத்தில் பேக்கரியின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோதுரூபாய் 72,000 மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம ஆசாமி திருடியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரப்பாளையம் டி.டி. ரோடு வை சேர்ந்தவர் சின்னம்மாள் சின்னசாமி 66. இவர் அதே முகவரியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மதயம்பேக்கரியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது தனக்கு சொந்தமான மணிபர்சில் ரூபாய் 71650 மற்றும்ஒரு பவுன் நகையையும் வைத்துவிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அதை முடித்துவிட்டு பார்த்தபோது அந்த மணி பர்சை காணவில்லை அதில் வைத்திருந்த பணமும் நகையும் திருடு போய்விட்டது .இந்த சம்பவம் தொடர்பாக சின்னம்மாள் சின்னசாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.


மதுரை அருகே மாடிப் படி ஏறிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்து மரணம்

மதுரை ஜன 17 மதுரை அருகே மாடிப் படியில் ஏறிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை அருகே கடச்சநேந்தல் எல் கே டி நகரை சேர்ந்தவர் மெர்சி என்ற காயத்திரி 34 இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வீட்டின் மாடிப் படியில் ஏறிய போது கால் தவறி தடுமாறி விழுந்து விட்டார். இதில் பலமாக அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே மெர்சி என்ற காயத்திரிபரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சாவு குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை அருகே அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி மரணம்

மதுரை ஜன 17 மதுரைஅருகேஅணை கட்டில் குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை அருகேஎம்.கல்லுப் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி 35. இவர் அந்த பகுதியில் உள்ள அய்யனார் அணை கட்டிற்கு குளிக்கச் சென்றார் .அப்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் .இவரது சாவுகுறித்து மனைவி சமயக்காள்கொடுத்த புகாரின் பேரில் எம.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு கிராம தலையாரிக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை அருகே பெரிய கோட்டை வழுதனி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் பணிபுரியும் எல்லைப்பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளி கடத்தியுள்ளனர்.

இது குறித்து தலையாரி பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புது குலத்தை சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலையாரியை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் தலையாரியின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தலையாரியின் அலறலைக் கேட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.

சம்பவம் குறித்து தலையாரி பாண்டி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிவகங்கை நகர காவல் நிலையத்தினர் தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories