December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

என்னை ஹீரோவாக உணர வைத்த சென்னை ரசிகர்கள்: அஸ்வின் நெகிழ்ச்சி! ‘வேற லெவல் வேற லெவல்’ கோலி ஊக்கம்!

ashwin-ravichandran
ashwin-ravichandran

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் தற்போது சமனில் உள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் நூறு ரன்கள் கடந்து, 8 விக்கெட் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார். சொந்த மண்ணில் அவர் நூறு ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறை என்பதால், சென்னை ரசிகர்கள் அவரது சதத்தைக் கொண்டாடினர்.

https://twitter.com/AyushChannel/status/1361650979939049475

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்தார் அஸ்வின். மேலும் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த நிலையில் தன்னை ஒரு ஹீரோவாக உணர வைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தனது டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார் அஸ்வின்.

“ நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை உற்சாகப் படுத்திய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி” என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, அவரது கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து பேட்டிங்கில், அஸ்வின் பந்துவீசச் சென்ற போது, அவரை உற்சாகப் படுத்தும் விதமாக, வேற லெவல் வேற லெவல் அஸ்வின் என்று விராட் கோலி உற்சாகப் படுத்துவதும், அதனை அப்படியே திருப்பிச் சொல்லி ரிஷப் பந்த் ஊக்கப்படுத்துவதும் இப்போது வைரலாகி வருகிறது.

மேலும், மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மைதானத்தில் அஸ்வின் நடனம் ஆடும் வீடியோவும் டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories