வருமானவரி அதிகாரிகள் போல நடித்து பணம் நகை பறிப்பு!

rajeswari - 2026

ஓய்வுபெற்ற நடத்துனரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து, ரூ.45 இலட்சம் ரொக்கம், 60 பவுன் நகைகளை அபகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரில் உள்ள முக்கிய குற்றவாளியான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு போக்குவரத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில், இவர் அந்த பகுதியில் விநாயகர் கோவில் வைத்து பராமரித்து வந்த நிலையில், கோவிலுக்கு வந்த நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளனர்.

சுப்பிரமணியனின் குடும்பத்தாரிடம் ராஜேஸ்வரி நெருங்கிப் பழகிய நிலையில், ஓய்வுபெற்ற நடத்துனருக்கான பி.எஃப் பணம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்து அறிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரி குடும்பத்தினர் சுப்பிரமணியத்திடம் இருந்த பணத்தைக் கறக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு, தனது பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருப்பதாகவும், அதுகுறித்த ஆவணங்கள் வருமானவரித்துறை வசம் இருப்பதாகவும், அந்த சொத்துக்களை மீட்க ரூ.45 இலட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் இதனை நம்ப வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் போல தனது குடும்பத்தினர் ராகுல் உள்ளிட்ட 7 பேரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் போல கையெழுத்திட்ட ஆவணங்கள், போலி ஸ்டாம்புகள் போன்றவற்றை காண்பித்து ரூ.45 இலட்சம் மற்றும் 60 பவுன் நகைகளை அவரிடமிருந்து வாங்கி சென்றனர். நகை மற்றும் பணம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எதுவும் திரும்பி வரவில்லை. மேலும், ராஜேஸ்வரி உட்பட 8 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, சுப்பிரமணியம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை தேடி வந்த நிலையில், தஞ்சாவூரிலிருந்த ராஜேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories