December 6, 2025, 10:04 AM
26.8 C
Chennai

வருமானவரி அதிகாரிகள் போல நடித்து பணம் நகை பறிப்பு!

rajeswari - 2025

ஓய்வுபெற்ற நடத்துனரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து, ரூ.45 இலட்சம் ரொக்கம், 60 பவுன் நகைகளை அபகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரில் உள்ள முக்கிய குற்றவாளியான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு போக்குவரத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில், இவர் அந்த பகுதியில் விநாயகர் கோவில் வைத்து பராமரித்து வந்த நிலையில், கோவிலுக்கு வந்த நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளனர்.

சுப்பிரமணியனின் குடும்பத்தாரிடம் ராஜேஸ்வரி நெருங்கிப் பழகிய நிலையில், ஓய்வுபெற்ற நடத்துனருக்கான பி.எஃப் பணம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்து அறிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரி குடும்பத்தினர் சுப்பிரமணியத்திடம் இருந்த பணத்தைக் கறக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு, தனது பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருப்பதாகவும், அதுகுறித்த ஆவணங்கள் வருமானவரித்துறை வசம் இருப்பதாகவும், அந்த சொத்துக்களை மீட்க ரூ.45 இலட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் இதனை நம்ப வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் போல தனது குடும்பத்தினர் ராகுல் உள்ளிட்ட 7 பேரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் போல கையெழுத்திட்ட ஆவணங்கள், போலி ஸ்டாம்புகள் போன்றவற்றை காண்பித்து ரூ.45 இலட்சம் மற்றும் 60 பவுன் நகைகளை அவரிடமிருந்து வாங்கி சென்றனர். நகை மற்றும் பணம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எதுவும் திரும்பி வரவில்லை. மேலும், ராஜேஸ்வரி உட்பட 8 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, சுப்பிரமணியம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை தேடி வந்த நிலையில், தஞ்சாவூரிலிருந்த ராஜேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories