அணையில் குளிக்க சென்ற நண்பர்கள்! அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்!

friends 1 - 2026

திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பாரதிபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை வைத்துள்ளார்.

அவருக்கு 19 வயதில் கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன், நாகராஜன், செல்வ பிரபாகர் மூன்று பேருக்கும் 19 வயது ஆன நிலையில் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் பரத், சுதர்சன் (19), சுரேஷ்குமார் (19), சரவணன் (19) இவர்கள் 8 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியில் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு, அணைப் பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது கார்த்திக் பிரபாகரன் மட்டும் சாப்பிட்டு முடித்தவுடன் அணையில் இறங்கி குளித்துள்ளார். ஆனால் அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரின் அலறல் சத்தம் கேட்டு, லோகநாதன், செல்வ பிரபாகர், நாகராஜ் மற்றும் பரத் ஆகிய 4 பேரும் அணையில் குதித்தனர்.

ஆனால் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். தங்களின் கண்முன்னே நண்பர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி அதை கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஐந்து பேரின் உடலையும் மீட்டனர்.

அதன் பிறகு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கிய ஒரு நண்பரை காப்பாற்ற 4 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories