December 7, 2025, 1:23 AM
25.6 C
Chennai

ஒரு கட்சி சார்ந்து வாட்ஸ்அப்பில் விமர்சனம்! ஆசிரியர் மீது நடவடிக்கை!

whatsapp
whatsapp

சமூக வலைதளத்தில் அவதூறாக ஒருக்கட்சி சார்ந்து விமர்சனம் பதிவிடும், அரசுப்பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்.,6ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிகளில், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ ஓட்டு சேகரிப்பு, விமர்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

இதை மீறி செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நிலையில், கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கிழக்கு ராஜாப்பட்டியில், அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக, அமுதன் பணிபுரிந்து வருகிறார்.

இவர், தமிழக ஆசிரியர் கூட்டணியில், கரூர் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவரது பேஸ்புக்கில் தொடர்ந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார். அதில், முதல்வர் பழனிசாமி, அவரது தாயை தரக்குறைவாக, தி.மு.க.,- எம்.பி., ராசா பேசியதை, ‘சங்கிகள் எடிட்’ என்று பதிவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி பிரசாரம் குறித்து, ‘தொகுதிக்கு என்ன பண்ணிருங்கீங்கன்னு சொந்த கட்சிக்காரரே கேக்கறாரு, அரவக்குறிச்சி வேட்பாளர், பா.ஜ., அண்ணாமலை பற்றி, எவனாவது ஐ.பி.எஸ்., வேலையை விட்டுட்டு இப்படி கோமாளித்தனம் பண்ணுவானா?’ என, பதிவிட்டுள்ளார்.

மேலும், வேட்பாளர் பட்டியல், தி.மு.க.,வில் நடக்கும் ஆச்சரியம்! என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இவர், போட்டோ மற்றும் வீடியோவுடன் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது ஆசிரியர் அமுதன், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்.

இப்படி ஒரு கட்சி சார்பாக பதிவுகளை வெளியிடும் இவர், எப்படி ஓட்டுச்சாவடியில் நடுநிலையுடன் செயல்பட முடியும். இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த, 2017ல், சமூக வலைதளங்களில் ஆபாசமாக விமர்சனம் செய்ததால், அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி கூறுகையில்,”அந்த ஆசிரியரின், சமூக வலைதளத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories