ஆவி புகும், பெற்றோர் இறப்பர்.. 7 வயது சிறுமியை மிரட்டி மதமாற்ற முயற்சி!

cross blood stained1

ஈரோடு அருகே, சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததை கண்டித்து, போலீசில் பெற்றோர், ஹிந்து முன்னணியினர் புகாரளித்தனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், ஈஞ்சம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 44, விவசாயி. இவருடைய ஏழு வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியில், குடியிருக்கும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த உஷாராணி, வெர்ஜினியா ஆகிய இருவரும், சிறுமியை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளனர்.

மதம் மாறாவிட்டால் உன் பெற்றோருக்கு பயங்கர பிரச்னை வந்து, இருவரும் இறந்துவிடுவார்கள், உன் உடலில் ஆவி புகுந்து விடும் என, தவறான வார்த்தைகளை கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர்.

மேலும், அருகில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் சிறுமியை தொந்தரவு கொடுத்து, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், உஷாராணி மற்றும் வெர்ஜினியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மொடக்குறிச்சி தொகுதி ஹிந்து முன்னணி பொறுப்பாளர் முருகன் தலைமையில், மலையம்பாளையம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர். மனு மீது வழக்குப்பதிவு செய்த மலையம்பாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories