எஸ்.எம்.எஸ். விளம்பரம் மூலம் ரூ.46 கோடி சுருட்டல்: நடன நடிகர், பெண் தொழிலதிபர் கைது

call-taxi-cheating-caseசென்னை: செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரங்கள் அதிகம் செய்து, பொதுமக்களிடம் முதலீடாக ரூ.46 கோடி பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் ஒருவரும், நடன நடிகர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சென்னை கோயம்பேடு, பிருந்தாவன் நகர், முல்லைத் தெருவில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் தொழில் அதிபர் நர்மதா (34). இந்த நிறுவனத்தில் 170 கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் மீது, சூளைமேடு வீரபாண்டியன்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அவர் அளித்த புகார் மனுவில், சில மாதங்களுக்கு முன்பு “இந்தியா டிராக் கால் டாக்ஸி’ நிறுவனத்தில் இருந்து எனது செல்லிடப்பேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 36 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை படித்துப் பார்த்த எனக்கு, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என நினைத்தேன். இதையடுத்து நான், எனது மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 34 பேர் ரூ.34 லட்சம் முதலீடு செய்தோம். சில மாதங்களுக்கு மட்டும் எங்களுக்கு சரியாக பணம் வந்ததும். ஆனால் அதன் பின்னர் பணம் வரவில்லை. எங்களது பணத்தை கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடன் மேலும் 5 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுக்களில்… தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010–ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று அறிவிப்பு வெளியிட்டார். வாடிக்கையாளர் முதலீட்டுத் திட்டம் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்கக் காசு பரிசாகக் கிடைக்கும் என்றும், ஓர் ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்துப் பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது. லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம். நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்கக் காசு பரிசாகக் கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீட்டுப் பணத்தை கோடி, கோடியாகக் கொட்டினார்கள். ஒரு சிலருக்கு முதலீட்டுப் பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. அவை திரும்பி வந்தன. எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டுப் பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது மோசடிகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை செய்யும் பரத்குமார் (வயது 24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  • என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து, தொழிலதிபர் நர்மதா மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, நர்மதாவும், பரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நர்மதாவின் அலுவலகம் கோயம்பேட்டிலும், வீடு சென்னை முகலிவாக்கத்திலும் உள்ளது. அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம். அவரது தந்தை இந்து அறநிலையத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பி.எஸ்சி. பட்டதாரியான நர்மதா திருமணம் ஆனவர். தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார் பி.எஸ்சி. பட்டதாரி. திருமணமாகாதவர். சென்னை பிராட்வேயில் வசிக்கிறார். இவர் ஒரு நடன நடிகரும்கூட! தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்–1 நடன நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்றவர். நர்மதா இவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். நர்மதாவின் வலதுகரமாகச் செயல்பட்ட பரத்குமார், அவரது மோசடிகளுக்கும் துணை போயுள்ளார். சென்னையில் இந்த மோசடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories