December 6, 2025, 7:28 AM
23.8 C
Chennai

வேலை முடிந்து சாலையோரம் நடந்து வந்த பெண்கள்! நேர்ந்த விபரீதம்!

accedent
accedent

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிரியம்பட்டியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்தார்.

இவரும், அதே பகுதியில் வசித்து வரும் திருமலைசாமி என்பவரது மனைவி விஜயாவும் விட்டல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் விஜயாவும், அலமேலுவும் கிரியம்பட்டியிலிருந்து வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்-வேடசந்தூர் நான்குவழி சாலை ஓரத்தில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சேலம் நோக்கி மதுரையிலிருந்து மளிகை பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விஜயா, அலமேலு மீது வேகமாக மோதியது. அதில் அலமேலு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயா உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் விஜயாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த முனீஸ்வரன் (34) என்பவர் தான் லாரியை ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது.

மேலும் அவர் அந்த விசாரணையில் லேசாக கண் அசந்து தூங்கி விட்டதால் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories