23-03-2023 10:16 PM
More
    Homeசற்றுமுன்வேலை முடிந்து சாலையோரம் நடந்து வந்த பெண்கள்! நேர்ந்த விபரீதம்!

    To Read in other Indian Languages…

    வேலை முடிந்து சாலையோரம் நடந்து வந்த பெண்கள்! நேர்ந்த விபரீதம்!

    accedent
    accedent

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிரியம்பட்டியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்தார்.

    இவரும், அதே பகுதியில் வசித்து வரும் திருமலைசாமி என்பவரது மனைவி விஜயாவும் விட்டல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் விஜயாவும், அலமேலுவும் கிரியம்பட்டியிலிருந்து வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல்-வேடசந்தூர் நான்குவழி சாலை ஓரத்தில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சேலம் நோக்கி மதுரையிலிருந்து மளிகை பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விஜயா, அலமேலு மீது வேகமாக மோதியது. அதில் அலமேலு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயா உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் விஜயாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த முனீஸ்வரன் (34) என்பவர் தான் லாரியை ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் அந்த விசாரணையில் லேசாக கண் அசந்து தூங்கி விட்டதால் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    3 + sixteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...