December 6, 2025, 8:16 AM
23.8 C
Chennai

கூரியர்பாய் வேடமிட்டு மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி!

corrier
corrier

மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அவர் எடுத்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான விக்ரம் யாதவ், மகாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஸ்வரி (கிழக்கு) பகுதியில் வசித்து வருகிறார். மருந்து கடையை நடத்தி வரும் இவர், டாக்டர் ராஜேஷ் குமாரிடம் இருந்து, ​​யாதவ் ரூ .20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இவருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, தனது மகனின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல், அவரது மகனை பள்ளியில் இருந்து நீக்கியது.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த யாதவ், தனது நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு அவரின் மெடிக்கலுக்கு பக்கத்திலிருக்கும் டாக்டர் ராஜேஷ் குமாரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி யாதவ், 18 வயதான கல்லூரி மாணவர் ராஜேஷ், 32 வயதான அஜய் ஆகியோருடன் வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், டாக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது டாக்டரின் மனைவி மட்டும், பிளாட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு, ​​ராஜேஷ் மற்றும் அஜய் கூரியர் டெலிவரி செய்வது போல் ஏமாற்றி, கதவை திறந்த பிறகு டாக்டரின் மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுக்க சென்றனர்.

ஆனால், அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை வசமாக பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories