December 5, 2025, 1:55 PM
26.9 C
Chennai

அரசு ஆஸ்பத்திரி.. அறுவைசிகிச்சை மூலம் பிரசவம்… லஞ்சம் தராததால் வீல்சேரிலிருந்து கீழே தள்ளிய பெண் ஊழியர்!

uma
uma

நாகை அரசு ஆஸ்பத்திரியில், பிறந்த ஆண் குழந்தைகக்கு பணம் தராததால் பிரசவித்த பெண்ணை வீல் சேரில் இருந்து பெண் ஊழியர் கீழே தள்ளிவிட்டார்.

அவரின் இரக்கமற்ற செயல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம் திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராதா. இவர்களது மகள் முருகவள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நாகை அரசு மருத்துவமனையில் 18ம் தேதி சேர்க்கப்பட்டார்.

govt hospital
govt hospital

மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் முருகவள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு வராததால் அங்குள்ள கொரோனா வார்டில் வைத்தனர்.

நேற்றுமுன்தினம் முருகவள்ளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது. உடனே உறவினர்கள் முருகவள்ளியை சாதாரண வார்டுக்கு மாற்றும்படி கூறியுள்ளனர்.

govt hospital 4
govt hospital 4

நீண்ட நேரத்திற்கு பின் முருகவள்ளியை சாதாரண வார்டுக்கு மாற்ற உத்தரவு வந்தது. இதையடுத்து, உமா என்ற பெண் பணியாளர் ஒருவர், முருகவள்ளியை வீல் சேரில் ஏற்றி சாதாரண வார்டுக்கு அழைத்து சென்றார்.

govt hospital 2
govt hospital 2

அப்போது உறவினர்களிடம், ஆண் குழந்தை பிறந்துள்ளதால் பணம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் எங்களை போன்று இல்லாதவர்கள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதில் கோபமடைந்த அந்த பெண் ஊழியர், முருகவள்ளியிடம் மனம்நோகும்படி வார்த்தைகளை பேசி கொண்டே வீல்சேரில் தள்ளி வந்தார். சிறிது தூரம் வந்த பின்னர் திடீரென வீல்சேரில் இருந்து முருகவள்ளியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

govt hospital 1
govt hospital 1

இந்த சம்பவத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து குழந்தை பெற்ற பெண்ணை இப்படியா கீழே தள்ளிவிடுவது? அதுவும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால் பிறந்த குழந்தையை யார் பாதுகாப்பது? பணத்திற்காக ஒரு உயிருடன் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என கூறினர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories