தென்காசி: தொழுகைக் கட்டடத்தில் மசூதி கட்ட என்.ஓ.சி., கோரிய மனு… உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

madurai high court
madurai high court

தென்காசியில் அம்மன் சந்நிதித் தெருவில் உள்ள தொழுகைக் கட்டடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு தடையில்லாச் சான்று வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி மாவட்டம் தென்காசியில், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு எதிரில், அம்மன் சந்நிதி வீதியில், கோயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் தென்காசி சார்பு அமர்வு நீதிமன்றத்தின் எதிர்ப் புறத்தில் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்ட பஜார் பள்ளிவாசல் என்று கூறப்படும் முஸ்லீம் தொழுகைக் கூடம் ஏற்படுத்தப் பட்டது.

கடந்த 1981-ஆண்டு கோவில் கட்டளைச் சொத்தை பரமாரித்து வந்த வேலாயுத பிள்ளை என்பவரிடமிருந்து தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக இந்த இடம் கிரையம் செய்யபட்டு, தொழுகைக் கூடமாக மாற்றப் பட்டது. அதன் பின்னர் இங்கே தினமும் 5 வேளை முஸ்லீம்கள் தொழுகை செய்து வந்தனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில் இந்தத் தொழுகைக் கட்டடத்தில் 2006-ஆம் ஆண்டு மராமத்துப் பணிகள் செய்யப் பட்டபோது தென்காசியைச் சேர்ந்த குமார் பாண்டியன் (த/பெ சொர்ண தேவர் மலையான் தெரு) அதனை எதிர்த்தார். இந்தப் பிரச்னைக்காக 17-12-2006 அன்று, குமார் பாண்டியனை ஹனிபா, சுனையல் சுலைமான், முருகேசன் அப்துல்லா ஆகியோர் கொலை செய்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தை அடுத்து 2007-ஆம் ஆண்டு, மூஸ்லீம் தரப்பில் 3 பேரும், இந்துக்களின் தரப்பில் 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து- முஸ்லீம் இருதரப்புக்கு இடையே பதற்றம் நிலவியது.

இந்நிலையில், தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத்தினர் 2014-ஆம் வருடம் இந்தத் தொழுகைக் கட்டடத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மேற்படி வழக்கில் விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்றம் கிளை (WP no 16969/ 2014 ) வழக்கின் தீர்ப்பை 19 -11- 2019 -ம் தேதி ஒத்தி வைத்தது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று 30 -04- 2021 தீர்ப்பு வழங்கப் போவதாக அறிவித்திருந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் மேற்படி தடையில்லாச் சான்று அளிக்க உத்தரவிடக் கோரி அளிக்கப் பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த இடத்தில் எந்த விதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப் படக் கூடாது என்றும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories