பல்லாவரம் உதவி ஆணையாளர் ஈஸ்வரன் கொரோனா தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார்.
கொரோனா பாதிப்பால் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
உயிரிழந்த ஈஸ்வரன் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டிருந்தவர் என்றும், கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை சென்னை காவல் துறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.