December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

தீடிரென்று வந்து சோதனை சாவடியை தாக்கிய யானை!

elephant
elephant

சத்தியமங்கலம் அருகே பலாப்பழத்திற்காக பண்ணாரி காவல்துறையினர் சோதனை சாவடியை சூறையாடிய மக்னாயானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்களை கண்காணிக்க பண்ணாரி கோவில் அருகே காவல்துறையினர் போலீஸ் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னாயானை ஒன்று பண்ணாரி சோதனைச் சாவடி அருகே உள்ள சாலையில் சுற்றி வந்த நிலையில் திடீரென காவல்துறையினர் சோதனைச் சாவடியை தாக்க தொடங்கியது.

மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் பண்ணாரி சோதனை சாவடியின் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழம் வாசனைக்காக மக்னா யானை சோதனை சாவடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

யானை ரகளையில் ஈடுபட்டதால் அத்தியவசியப்பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories