கீரைகளின் அரசன்.. சக்கரவர்த்திக் கீரையின் பயன்!

Chakravarti keerai
Chakravarti keerai

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் வந்தது. இந்த கீரையின் இலை அமைப்பு வாத்தின் கால் போல இருக்கும். சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.

தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.

ரத்த சோகை

நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உணவில் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் ரத்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்துகள் தயாரிக்கலாம்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

வயிற்றுப்புண்

நம் உட்கொள்ளும் உணவில் அதிகமாக காரம், மசாலா, சேர்த்து சாப்பிடுவதால் அதிக அமில சுரப்பியால் வயிற்றுப்புண் உண்டாகும். இதை அலட்சியப்படுத்தும் போது தான் அல்சராக மாறுகிறது. இதனால் செரிமானக்கோளாறு, போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் நமக்கு வராமல் இருக்க உணவில் சக்கரவர்த்தி கீரையை எடுத்து கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

இந்தியாவில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து குணமாக சிலர் செயற்கை மருந்துகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் கீரை மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்த பலர் மறுக்கின்றனர். ஆனால் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு கீரை வகைகள் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. அதிலும் சக்கரவர்த்தி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கும்.

மூட்டு பிரச்சனை

மூட்டுவலி அதிகரிக்கும் போது செயற்கை மருந்துகள் உடனடியாக வேலை செய்யாது, அப்போது சக்கரவர்த்தி கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக சூடேறியதும் அதை மெல்லிய துணியில் உருண்டையாக்கி இறுக கட்ட வேண்டும். கட்டிய பின் மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி குறையும். மேலும் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சிறுநீரக பிரச்சனை

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனையில் இருந்து குணமாக, சக்கரவர்த்தி கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தபின் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். மேலும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது.

தோல் பிரச்சனை

சக்கரவர்த்தி கீரையை நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள புண் மற்றும் தழும்புகள் குணமாகும். மேலும் சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனகள் குணமாகும்.
சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து உடலில் மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்வதால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.

சக்கரவர்த்தி கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.

சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சக்கரவர்த்தி கீரை வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மை கொண்டது.
இந்த கீரை, எலும்புகளை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Entertainment News

Popular Categories