எலட்ரிகல் கடையில் தீவிபத்து! 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

fire - 2026

ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஊரடங்கு காரணமாக கடந்த பல வாரங்களாகப் பூட்டிக் கிடந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் எலக்ட்ரிகல் விற்பனை நிலையத்தில் மின்சார அழுத்தம் காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள அடுக்கு மாடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரிக் கடையொன்று உள்ளது. இதில் வீடு மற்றும் கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒயர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக விற்பனை நிலையம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு விற்பனை நிலையத்திலிருந்து கரும்புகை வெளிவருவதாக அந்த வளாகத்தின் காவலாளி அனில்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அனில்குமார் புகை அதிகரித்திடவே வி|ற்பனை நிலையத்தை திறந்து பார்த்த போது மின்சாதனப் பொருட்களில் தீ பற்றி எரியத் தொடங்கியதைக் கண்டு அச்சமடைந்து உடனடியாக ஈரோடு தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதற்கிடையில் இந்தத் தீவிபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. அதிக மின்சார அழுத்தம் காரணமாகவும், மின்கசிவு காரணமாகவும் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories