February 22, 2026, 1:53 PM
29.6 C
Chennai

ஆஸ்பத்திரி பிடிக்கல.. பையில் குழந்தையோடு வெளியேறிய தாய்! பிறந்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

shanmugam - 2026

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்மணி, மருத்துவனையில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையை கட்டைப் பையில் மறைத்து எடுத்துச் சென்றதும், அப்போது குழந்தை உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனியில் மனைவி தனலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனலட்சுமிக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தனலட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கே சிகிச்சை பெற்ற தனலட்சுமி, திடீரென கணவர் மற்றும் பிறந்த குழந்தையுடன் மாயமாகி உள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துமனை நிர்வாகம் பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

dhanalaksmi - 2026

இதையடுத்து அவர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்று விசாரித்தபோது தனக்கு மருத்துவமனையில் இருக்க பிடிக்காததால், வெளியேறி விட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் கட்டைப் பையில் குழந்தையை மறைத்து எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாகவும் அதனை காளிவேலம்பட்டி பகுதியில் கணவர் சண்முகம் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தனலட்சுமி கூறியுள்ளார்.

shanmugam thanam - 2026

இதையடுத்து பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் முன்னிலையில் மருத்துவ குழுவினர் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories