December 6, 2025, 2:40 AM
26 C
Chennai

ஊரானோடு சென்ற மனைவி! கழுத்தை சீவிய கணவன்!

murder
murder

இளைஞருடன் உறவில் இருந்துவிட்டு வந்த மனைவி மீது ஆத்திரம் தீராததால் இளநீர் வெட்டும் அரிவாளால் அவரின் தலையை சீவி இருக்கிறார் கணவனின் செயல் ராமேஸ்வரம் பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.

ராமேஸ்வரம் மல்லிகை நகரில் வசித்து வருபவர் தில்லை. இளநீர் வியாபாரியான இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு பெண் குழந்தைக்கு இப்போது ஐந்து வயதாகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு திடீரென்று மாயமாகிவிட்டார் பவித்ரா. இதனால், மனைவியை காணவில்லை என்று ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு ஊரெங்கும் தேடி வந்தார் தில்லை.

சில நாட்கள் கழித்து தானாகவே வீடு வந்து சேர்ந்துள்ளார் பவித்ரா. எங்கே சென்றிருந்தாய் என்று கேட்டதில் ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

உறவினர்களும், போலீசாரும் துருவித் துருவி விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்கிற இளைஞருடன் சென்று உறவில் இருந்துவிட்டு வந்தது தெரியவந்தது.

இரு வீட்டாரும் அமர்ந்து சமாதானம் பேசி தில்லை -பவித்ராவை மீண்டும் ஒற்றுமையாக வாழச்சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் தில்லை சமாதானம் ஆகவில்லை. அவரது ஆத்திரம் அடங்காமல் இருந்து வந்துள்ளது.

சண்டையில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார் பவித்ரா. நேற்று காலையில் குழந்தையுடன் அம்மா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, சமாதானம் பேசுவது போல் அருகே சென்றிருக்கிறார் தில்லை. அப்போது திடீரென்று பவித்ராவின் தலையை இளநீர் வெட்டும் அரிவாளால் சீவிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.

ராமேஸ்வரம் போலீசார் பவித்ராவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories