December 6, 2025, 2:37 AM
26 C
Chennai

கலைக்க மறுத்த கர்ப்பிணி காதலி! கதவைப் பூட்டி தீ வைத்த காதலன்!

fire 1 - 2025

கர்ப்பிணி காதலி மீது டீசல் ஊற்றி பற்ற வைத்துவிட்டு வீட்டுக்கதவையும் பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார் இளைஞர். இந்த கொடூர சம்பவம் நடந்தது திருப்பூரில்.

ஆந்திராவை சேர்ந்த லட்சுமி(வயது21) தனது பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு கடந்த 2019ம் ஆண்டில் திருப்பூர் வந்துள்ளார். அங்கேயே தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பனியன் கம்பெனிக்கு தினமும் ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் கவுதம்(26) உடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்வதாக கவுதம் சொன்னதால், அவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

மூன்று மாத கர்ப்பத்துடன் இருந்த லட்சுமி, தன்னை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி கவுதமிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால், கவுதமும் அவரது வீட்டாரும் கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி இருக்கின்றனர்.

முடியாது என்று லட்சுமி உறுதியாக இருக்கவும், லட்சுமி மேல் டீசலை ஊற்றி தீ பற்றவைத்துவிட்டு வீட்டுக்கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஓடிவிட்டார் கவுதம்.

பின்னர் அவரே வந்து லட்சுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் லட்சுமியை விட்டுவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார் கவுதம். சிகிச்சை முடிந்ததும் லட்சுமியை கோவையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இந்த நிலையில் கவுதம் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்ததும், பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் லட்சுமி. புகாரின் பேரில் விசாரணை செய்து கவுதமை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர் போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories