spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விபத்தில் மூளைச்சாவு அடைந்த தந்தையின் உடலுறுப்பைத் தானம் செய்த பிள்ளைகள்!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தந்தையின் உடலுறுப்பைத் தானம் செய்த பிள்ளைகள்!

- Advertisement -

திருச்சி அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் செய்த குடும்பத்தினரின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள சோழன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( 47 ),இவர் கடந்த 1ம் தேதி இருச்சக்கர வாகனத்தில் திருச்சி டோல்கேட்டை அடுத்த அருகே பளூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் சிக்கினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ்க்கு நேற்று மாலை மூளை செயல் இழந்தது.

அரசு மருத்துவர்கள் செல்வராஜின் உறவினர்களை அழைத்து செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தது குறித்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து முறையாக ஆலோசனைகள் வழங்கினர் – செல்வராஜின் மகன் அசோக் மற்றும் மகள் கங்கா கல்லூரி மாணவர்கள்.

கண்டிப்பாக அப்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு இரண்டு சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரலை எடுத்து முறைப்படி உடல் உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்கினர்.

தந்தையை இழந்த போதிலும் பிறருக்கு வாழ்வளிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்த செல்வராஜ் குடும்பத்தினரின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe