சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன்? – அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

supreme-court-Indiaபுது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன் என்று மனுதாரர் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு கேள்வி எழுப்பியதுடன், சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணையில், ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக முடியாது என்றும், அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் அவரை அரசு வழக்கறிஞராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே கோரிக்கையை முன்வைத்து, க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 9) நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன் படி இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், பவானிசிங்கை நீக்கக் கோரும் மனு தொடர்பாக கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதே நேரம், அன்பழகன் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் சூழல் நெருங்கும்வரை காத்திருந்தது ஏன் என மனுதாரரிடம் இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories