December 6, 2025, 6:00 AM
23.8 C
Chennai

கோயில் இடத்தில் மசூதிக்கு வழி! நீதிமன்ற உத்தரவை அரசு மதித்து நடக்க வேண்டும்!

pallivasal path in temple land1 - 2025

கோவில் இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது..
தமிழக அரசு, நீதிமன்ற உத்திரவை மதித்து நடக்க வேண்டுகிறோம்.. என்று கூறினார் இந்து முன்னணி சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன்.

இது குறித்து இளங்கோவன் தெரிவித்ததாவது…

வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20 க்கு 80அடி வழி ஏற்படுத்திக் கொடுத்த செய்தி அறிந்து, நேற்று மாலை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்தோம். அதில் நேற்று முன்தினம் கோவில் நிலத்தில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அப்போது அங்கு உள்ள மசூதிக்குச் செல்ல எங்களுக்கு 20க்கு 80 அடி பாதை வேண்டும் என்று முச்லிம்கள் கேட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மறுக்கவே, முஸ்லிம்கள், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.க்கு தகவல் கொண்டு சொல்லி உள்ளனர்.

விருகம்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. வந்து மசூதிக்குச் செல்ல வழி கொடுக்கச் சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று எடுத்துச் சொல்லியும், எம்.எல்.ஏ.வும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை

pallivasal path in temple land - 2025

மேலும் மசூதி ஒலிபெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர். விருகை எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் ஆகியோரிடம் பேசி ஒப்புதல் பெற்றதாக சொல்லப்பட்டது. பிறகு மசூதிக்கு வழி விடப்பட்டு சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம், இந்துக்களின் நூறாண்டு கால ஆலயங்கள் இடிக்கப் படுகின்றன. இன்னொருபுறம் கோயில் சொத்தினைக் கொடுக்கச் சொல்லி எம்.எல்.ஏ இந்து சமய அதிகாரியை கட்டாயப் படுத்துகிறார். கூட்டம் சேர்ந்து முஸ்லிம்கள் அச்சமூட்டி, மிரட்டி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். ஆனால் வழக்கு இல்லை, கைது நடவடிக்கை இல்லை.

இந்துக்கள் உரிமைக்காகப் போராடினாலே கைது நடவடிக்கைகள் எடுக்கும் அரசும் காவல்துறையும், முஸ்லிம்கள் என்றால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கோவில் இடத்தை விட்டுக் கொடுத்ததற்கு இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இதனைச் சரி செய்து சுவர் அமைக்க வேண்டும் என்றும் இலையென்றால் இந்து முன்னணி சார்பில் பொதுமக்களையும் முருக பக்தர்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது… என்று இந்து முன்னணி மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories