December 5, 2025, 1:09 PM
26.9 C
Chennai

ஆடித்தபசு தரிசனத்துக்கு தடை! அரசுக்கு பக்தர்கள் சாபம்! கோயிலுக்குள் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது!

sankarankoil protest - 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவில், கோமதி அம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது. ஆனால், தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணி தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து, இந்து முன்னணிமாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாநில செயலர் கா.குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 75 பேர் கைது செய்யப் பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா கொண்டாடப் பட்டது. ஆயினும், கொரோனாவைக் காரணம் காட்டி பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து, கோயில் வாசல் பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை பக்ரீத் தொழுகை நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு, கோவில்களை மட்டும் பூட்டுவது பாரபட்சமானது எனக் கூறி ஆலய நுழைவுப் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்தனர்.

sankarankoil protest1 - 2025

இதன்படி, இன்று காலை சங்கரன்கோவிலில் இந்து முன்னணி அமைப்பினர் திரண்டனர். இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், துணைத்தலைவர் முருகன் , திருமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இசக்கிமுத்து, சங்கரன்கோவில் நகர தலைவர் விக்னேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், தென்காசி நகரத்தலைவர் நாராயணன் உட்பட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்!

தொடர்ந்து தேரடியிலிருந்து கோவிலை நோக்கிச் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

இதனைத் தொடர்ந்து இந்துமுன்னணி நிர்வாகிகள் 75பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் சங்கரன்கோவில் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரம், சங்கரன்கோயில் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிப் போன கோமதியம்மனின் தரிசனத்துக்காக கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோவில் பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு, மிகுந்த மனவேதனையுடன் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சாபம் விட்டபடியே திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories