பாஜக., ஆர்ப்பாட்ட அறிவிப்பு! பாதிரி பொன்னையா கைது!

george ponnaiah - 2026

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரத மாதா, பூமாதேவி, ஹிந்துக்கள், எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி என பலரையும் தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சித்த பாதிரியார் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக., இன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், பாதிரி ஜார்ஜ் பொன்னையா மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே கைது செய்யப் பட்டார்.

முன்னதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருந்தன. இந்நிலையில், தலைமறைவானதாகக் கூறப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிந்து மதம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரத மாதா, பூமா தேவி, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோரை வாய்க்கு வந்த படி வசவுகளாலும், மிக மோசமான வார்த்தைகளாலும் பேசியிருந்தார் பாதிரியார் பொன்னையா. குறிப்பாக, திமுக., குறித்தும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இன்றைய திமுக., அரசு, கிறிஸ்துவ இஸ்லாமிய சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது புகார்கள் பல அளிக்கப் பட்டன. பாதிரி மீது 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாகக் கூறப் பட்டது. அவர் கடல் வழியாக அருகில் உள்ள தீவுப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் கசியவிடப் பட்டன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தக் கட்டடம் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள, அருமனையில் ஜூலை 18ஆம் தேதி ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார்.

அப்போது அவர், ‘திமுக.,வின் வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, இப்போது 62 சதம் வளர்ந்து விட்ட கிறிஸ்துவர்களின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. இதை இந்து சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்… அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு என்னதான் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் எவனும் திமுக.,வுக்கு ஓட்டு போடமாட்டான்’ என்றெல்லாம் பேசிய பாதிரியார், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் குறித்தும் மிகக் கேவலமான முறையில் பேசினார்.

அவரது இந்தப் பேச்சு, சமூகத் தளங்களில் பெரும் அளவில் வைரலானது. அவரது பேச்சு, ஹிந்துக்களின் மத்தியில் பெரும் மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகத் தளங்களில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அதே நேரம், திமுக., ஆட்சி சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்பதால், அவர் மீது திமுக., எந்த நடவடிக்கையும் எடுக்காது, பாதிரியார் உண்மையத் தான் பேசியிருக்கிறார், பிச்சை வாங்கியவர்கள் தங்களுக்கு பிச்சை அளித்தவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற விதத்தில் கருத்துகள் பகிரப் பட்டன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

திமுக.,வையும், அதன் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் குறித்தும் தரக்குறைவாகப் பேசியிருந்த நிலையிலும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் தமிழகம் முழுதும் பல இடங்களில் போலீசில் புகார் அளித்தனர்.

இதை அடுத்து அருமனை போலீசார், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ‘நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் ஹிந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்’ எனக் கூறியிருந்தார்.

இந்தப் பரபரப்பு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையிலும், பாதிரியார் கைது செய்யப் படவில்லை. இதனிடையே அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் போலீசார் முகாமிட்டனர். அப்போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் அவர் ஊர் திரும்புவார் என்றும் தகவல்கள் கசியவிடப் பட்டன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே மண்டைக்காடு கலவரத்தை முன்னின்று நடத்திய கிறிஸ்துவ பாதிரிகளால், அதைக் குறிப்பிட்டே மீண்டும் மத மோதல்கள் எழும் சூழ்நிலை உருவானதால், பாதிரியாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாஜக., இன்று போராட்டம் அறிவித்தது. மேலும், ஹிந்து அமைப்புகள் பலவும் போராட்ட எச்சரிக்கை விடுத்த நிலையில், அரசுக்கு நெருக்கடி முற்றியது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதனிடையே, பாதிரி ஜார்ஜ் பொன்னையா, சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பிச் செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மதுரை கருப்பாயூரணியில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையில் சிலைமான் போலீசாரிடம் ஜார்ஜ் பொன்னையா சிக்கினார். பின்னர் விசாரணைக்காக கோவில்பட்டி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப் பட்டு விசாரணை செய்த போலீஸார், இன்று அவரை குமரி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைப்பர் என்று கூறப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories