பெண்ணை விற்கும் போது ஏற்பட்ட தகராறில் கொலை! 4 பேர் கைது!

murder 1 1 - 2026

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்ரேல் சாகா (34), இஸ்மாயில் (30). இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.

இஸ்ரேல் சாகா இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி நண்பர்களிடம் பணம் வாங்க செல்வதாக, பணிபுரிந்து கொண்டிருந்த ஓட்டலில் இருந்து சென்னை சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற இஸ்ரேல் சாகா பின்பு மாயமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சாகா காணவில்லை என ராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில், காணவில்லை என சகோதரர் புகார் அளித்தார்,

இதனைத்தொடர்ந்து, புகாரை பெற்றுக் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை துவங்கினர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜோதி உயர்தர உணவகத்தில் 15.7.21 அன்று புதிதாக வேலைக்கு இணைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு, ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டலம் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் குருதேவ் என்பவர், இவர்களை மேவலுர் குப்பம் ஏரிக்கரை பகுதியிலுள்ள உள்ள தனி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் .

அங்கு பலமுறை பாலியல் வழக்கில் ஸ்ரீ பெரும்புதூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல முறை சிறை சென்ற மேற்கு வங்கத்தைச் சார்ந்த திப்பு (47) இவரை சந்தித்துள்ளார். இவருடன் திருவள்ளூர் மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் (28 ),ஜெயக்குமார் ( 30 ), ரஞ்சித் ( 32 ), ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

Criminals - 2026

மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த திப்பு தனிமையாக உள்ள வீட்டில் உள்ளூர் நபர்கள் துணையுடன் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இவரிடம் இஸ்ரேல் சாகா தனக்கு தெரிந்த பெண்ணை அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக இவரிடம் இருந்து பணம் கேட்டுள்ளார், இவ்வாறு இவர்கள் இதுபோன்ற பரிவர்த்தனையில் பலமுறை ஈடுபட்டதாக தெரிகிறது .

இந்நிலையில் அன்று அவ்வாறு மீண்டும் அந்தப் பெண்ணை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, பணம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பணவிஷயத்தில் இஸ்ரேல் சாகா தொடர்ந்து கராராக இருந்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வாய்த்தகராறு திடீரென்று கைகலப்பாக மாறியது. அதில் திப்பு, ராஜ், அஜித்குமார்(23), குருதேவ், ஜெயக்குமார், ரஞ்சித் ஆகியோர் இஸ்ரேல் சாகாவை சரமாரியாக அடித்து கொலை செய்து மேவலூர் குப்பம் கிராமம் கிருஷ்ணா கால்வாய் அருகில் இஸ்ரேல் சாகாவை புதைத்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் சாகாவின் தம்பி அளித்த புகாரின் அடிப்படையில் இஸ்ரேலை போலீசார் தேடி வந்தனர் . இஸ்ரேல் செல்பேசியை பயன்படுத்தி போலீசார் அவரைத் தேடியபோது குறிப்பிட்ட நபர்களிடம் அவர் தொடர்ந்து பேசியது தெரியவந்தது.

Sriperumbudur - 2026

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொழில் விவகாரத்தில் பணம் கொடுக்கும் பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஐந்து பேரும் இணைந்து இஸ்ரேலை அடித்துக்கொன்றோம் என வாக்குமூலம் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இஸ்ரேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக 5 நபர்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்திய பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொழில் விவகாரத்தில் பணத்தை கை மாற்றும் போது நடைபெற்ற, கொலை சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories