கொரோனாவால் உயிரிழந்த பெண்‌.. 3 மாதங்களுக்கு பின் ஒப்படைப்பு! மருத்துவமனையின் அலட்சியம், லஞ்சம்.. உறவினர்கள் புகார்!

alamelu
alamelu

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (40). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 19-05-2021 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த அலமேலு 22-05-21 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘கொரோனாவால் இறந்ததால் அலமேலுவின் உடலை கொடுக்க முடியாது; தாங்களே இறுதிச் சடங்குகளைச் செய்துவிடுவோம்’ என கூறி உறவினர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு அலமேலு உடலை எரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினரை தொடர்பு கொண்டு. அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், நேரில் வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்றுசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் ஆர்.எம்.ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனையில், அலமேலுவின் உடலை காண்பிக்க ரூ.2,500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 லஞ்சம் வாங்கப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார்தெரிவித்தனர். இதற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் நிலையமருத்துவர் அனுபமா கூறும்போது, ”நாங்கள் அலமேலு இறந்தது தொடர்பாக காஞ்சிபுரம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அலமேலுவின் உடலைப் பார்க்க லஞ்சம் பெற்ற விவரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறையினர் கூறும்போது, ”செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம்எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கொரோனாவால் இறந்த தகவலை தெரிவித்திருந்தால் நாங்கள் முறையாக அடக்கம் செய்திருப்போம். மருத்துவமனை நிர்வாகம் செய்த தவற்றை மறைப்பதற்காக எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்” என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, ”இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories