கொரோனாவால் உயிரிழந்த பெண்‌.. 3 மாதங்களுக்கு பின் ஒப்படைப்பு! மருத்துவமனையின் அலட்சியம், லஞ்சம்.. உறவினர்கள் புகார்!

alamelu
alamelu

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (40). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 19-05-2021 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த அலமேலு 22-05-21 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘கொரோனாவால் இறந்ததால் அலமேலுவின் உடலை கொடுக்க முடியாது; தாங்களே இறுதிச் சடங்குகளைச் செய்துவிடுவோம்’ என கூறி உறவினர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு அலமேலு உடலை எரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினரை தொடர்பு கொண்டு. அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், நேரில் வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்றுசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் ஆர்.எம்.ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

மேலும் மருத்துவமனையில், அலமேலுவின் உடலை காண்பிக்க ரூ.2,500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 லஞ்சம் வாங்கப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார்தெரிவித்தனர். இதற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் நிலையமருத்துவர் அனுபமா கூறும்போது, ”நாங்கள் அலமேலு இறந்தது தொடர்பாக காஞ்சிபுரம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அலமேலுவின் உடலைப் பார்க்க லஞ்சம் பெற்ற விவரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறையினர் கூறும்போது, ”செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம்எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கொரோனாவால் இறந்த தகவலை தெரிவித்திருந்தால் நாங்கள் முறையாக அடக்கம் செய்திருப்போம். மருத்துவமனை நிர்வாகம் செய்த தவற்றை மறைப்பதற்காக எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்” என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, ”இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories