ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கத்தேரில் ஆடிப்பூர பவனி!

srivilliputhur ther
srivilliputhur ther

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் தேரோட்டம்.தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி, கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெற்றது…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்டம் இன்று காலை கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, மிகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும், ஆடிப்பூரம் தேரோட்டம் விழா சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆடிப்பூரம் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளை தங்கத் தேரில் எழுந்தருளச் செய்து, கோவில் வளாகத்திற்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டும் கொரோனா 2ம் அலை காரணமாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த 3ம் தேதி ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்ட விழாவிற்காக கொடியேற்றப்பட்டது. ஒரு வாரமாக பக்தர்கள் இல்லாமல், கோவில் நிர்வாகிகள், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு, கோவில் வளாகத்திற்குள் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

srivilliputhu ther andal mannar
srivilliputhu ther andal mannar

மேலும் மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்தும் ஸ்ரீஆண்டாளுக்கு அணிவிக்க பட்டு சேலை, மங்கலப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை தங்கத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு பட்டு வஸ்த்திரங்கள் அணிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்திற்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கரதம் இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். தேரோட்டம் நிகழ்ச்சியை காண பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று காலை நடைபெற்ற ஆடிப்பூரம் தேரோட்டம் நிகழ்ச்சியை காணொலி காட்சி வழியாக நேரடி ஔிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தேரோட்டம் நிகழ்ச்சியை கண்டு, ஸ்ரீஆண்டாளை மனதார வணங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories