நிறுவனம் நடத்தி 3 கோடி மோசடி! சையது ஃபாரூக்கை தேடும் போலீஸ்!

faruk
faruk

மதுரையில் நிறுவனம் நடத்தி பணம் இரட்டிப்பு ஆசைகாட்டி 150 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த திண்டுக்கல் சையது பாரூக் 29, உட்பட மூவரை போலீசார் தேடுகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில் ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பி.லிட்., என்ற பெயரில் கடந்தாண்டு மே மாதம் சையது பாரூக் மோசடி நிறுவனத்தை ஆரம்பித்தார். பங்கு சந்தையில் முதலீடு செய்ய உள்ளதாக கூறி வாட்ஸ் ஆப் குரூப்பில் தகவலை ‘கசிய’விட, படித்தவர்கள், பணம் இருப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்தனர்.

அங்கு நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்தி மணிகண்டன் , ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவோம்’ என ஆசையை துாண்ட, பணம் கொட்டியது.

ஆட்களை சேர்த்துவிட்டவர்களுக்கு கமிஷன் கரெக்டாக கொடுக்க, ஆளாளுக்கு ஆள் பிடிக்க ஆரம்பித்தனர்.
இந்தாண்டு மார்ச் வரை கமிஷன் கொடுத்தவர்கள், அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

பணம் போட்டவர்கள் ‘பித்து’ பிடித்தவர்கள் போல் போலீசிற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 150 பேர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டது திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் புகாரின் அடிப்படையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. சையது பாரூக், ஆனந்தி மணிகண்டன், ஊழியர் திண்டுக்கல் மனோஜ்குமார் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் (0452 – 264 2161) புகார் தெரிவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories