நிறுவனம் நடத்தி 3 கோடி மோசடி! சையது ஃபாரூக்கை தேடும் போலீஸ்!

faruk
faruk

மதுரையில் நிறுவனம் நடத்தி பணம் இரட்டிப்பு ஆசைகாட்டி 150 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த திண்டுக்கல் சையது பாரூக் 29, உட்பட மூவரை போலீசார் தேடுகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில் ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பி.லிட்., என்ற பெயரில் கடந்தாண்டு மே மாதம் சையது பாரூக் மோசடி நிறுவனத்தை ஆரம்பித்தார். பங்கு சந்தையில் முதலீடு செய்ய உள்ளதாக கூறி வாட்ஸ் ஆப் குரூப்பில் தகவலை ‘கசிய’விட, படித்தவர்கள், பணம் இருப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்தனர்.

அங்கு நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்தி மணிகண்டன் , ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவோம்’ என ஆசையை துாண்ட, பணம் கொட்டியது.

ஆட்களை சேர்த்துவிட்டவர்களுக்கு கமிஷன் கரெக்டாக கொடுக்க, ஆளாளுக்கு ஆள் பிடிக்க ஆரம்பித்தனர்.
இந்தாண்டு மார்ச் வரை கமிஷன் கொடுத்தவர்கள், அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

பணம் போட்டவர்கள் ‘பித்து’ பிடித்தவர்கள் போல் போலீசிற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 150 பேர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டது திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் புகாரின் அடிப்படையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. சையது பாரூக், ஆனந்தி மணிகண்டன், ஊழியர் திண்டுக்கல் மனோஜ்குமார் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் (0452 – 264 2161) புகார் தெரிவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories