February 22, 2026, 3:39 AM
25.6 C
Chennai

குழந்தைகளைக் கொன்று பெற்றோர் தற்கொலை!

chandran
chandran

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மார்லிமந்து எனும் பகுதியில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருபவர் சந்திரன் (42). இவருக்கு கீதா (35) என்ற மனைவியும், ரக்க்ஷிதா(16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடுகள் கத்துவதாக கூறியுள்ளார். இதன் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது சந்திரன் வீட்டு கதவு உள் பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த நந்தகுமார், புதுமந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காவல் துறையின் உதவியோடு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுமந்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நான்கு பேரின் உடல்களை மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் புதுமந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories