December 6, 2025, 9:56 AM
26.8 C
Chennai

குழந்தைகளைக் கொன்று பெற்றோர் தற்கொலை!

chandran
chandran

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மார்லிமந்து எனும் பகுதியில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருபவர் சந்திரன் (42). இவருக்கு கீதா (35) என்ற மனைவியும், ரக்க்ஷிதா(16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடுகள் கத்துவதாக கூறியுள்ளார். இதன் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது சந்திரன் வீட்டு கதவு உள் பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த நந்தகுமார், புதுமந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காவல் துறையின் உதவியோடு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுமந்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நான்கு பேரின் உடல்களை மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் புதுமந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories