இடது கால் முறிவுக்கு வலது காலில் கட்டு! தென்காசி மருத்துவமனை மீது புகார்!

thenkasi
thenkasi

இடது கால் முறிவு ஏற்பட்ட நபருக்கு வலது காலில் கட்டு போட்டு அதே கட்டுடன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவத்தை தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தால் மட்டுமே நடந்தது என்ன என்பது குறித்து முழுமையாக தெரியும்.

தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது வீட்டு மாடியில் இருந்து கால் தவறி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அவருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மாடசாமியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

thenkasi gh
thenkasi gh

இதையடுத்து அவருக்கு காலில் சிகிச்சை அளித்து மாவு கட்டுப் போட்டனர். ஆனால் மாடசாமியின் இடது காலுக்கு பதில் வலது காலில் கட்டு போடப்பட்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடது காலில் கட்டு போடுவதற்கு பதில் வலது காலில் கட்டு போட்டுள்ளனர். இதுகுறித்து மாடசாமி உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்துவிட்டது என்றும் எலும்பு முறிவு அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து வலது காலில் போடப்பட்ட கட்டை அவிழ்த்து முறைப்படி இடது காலில் போட்டு அனுப்பும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாக போடப்பட்ட கட்டுடன் மாடசாமியை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவன குறைவால் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு தவறுதலாக கட்டுப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories