December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

இடது கால் முறிவுக்கு வலது காலில் கட்டு! தென்காசி மருத்துவமனை மீது புகார்!

thenkasi
thenkasi

இடது கால் முறிவு ஏற்பட்ட நபருக்கு வலது காலில் கட்டு போட்டு அதே கட்டுடன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவத்தை தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தால் மட்டுமே நடந்தது என்ன என்பது குறித்து முழுமையாக தெரியும்.

தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது வீட்டு மாடியில் இருந்து கால் தவறி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அவருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மாடசாமியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

thenkasi gh
thenkasi gh

இதையடுத்து அவருக்கு காலில் சிகிச்சை அளித்து மாவு கட்டுப் போட்டனர். ஆனால் மாடசாமியின் இடது காலுக்கு பதில் வலது காலில் கட்டு போடப்பட்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடது காலில் கட்டு போடுவதற்கு பதில் வலது காலில் கட்டு போட்டுள்ளனர். இதுகுறித்து மாடசாமி உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்துவிட்டது என்றும் எலும்பு முறிவு அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து வலது காலில் போடப்பட்ட கட்டை அவிழ்த்து முறைப்படி இடது காலில் போட்டு அனுப்பும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாக போடப்பட்ட கட்டுடன் மாடசாமியை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவன குறைவால் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு தவறுதலாக கட்டுப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories