திருமணம் ஆகி 3 மாதம்.. மனைவியை காட்டிற்கு அழைத்து சென்று கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்!

manikanda braphu - 2026

கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருசிற்றம்பலம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் தனது இரண்டாவது மகள் ஜோதியை பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டபிரபு என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து ஜோதியின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர்.

அதன்பின் உறவினரிடம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு மணிகண்டபிரபு ஜோடியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மணிகண்டபிரபு சிவன் கோவிலுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளார். அதன்பின் ஜோதி தன் கணவரிடம் வேறு வழியாக எங்கு செல்கிறோம் என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய மணிகண்டபிரபு காட்டுப்பகுதியில் அடிக்கி வைத்திருந்த மரக்கட்டையை எடுத்து ஜோதியை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேராவூரணி காவல்துறையினர் ஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மணிகண்டபிரபுவை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் மணிகண்டபிரபு சரண் அடைந்துள்ளார்.

மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories