கர்ப்பமாக்கிய கைவிட்ட காதலன்.. 2வது இராணுவ கணவரிடம் நகை பணம் ஏமாற்றி 3 வதாய் ஒன்று!

Renuka
Renuka

ஒருவரை காதலித்து கர்ப்பிணியான இளம்பெண் மேலும் 3 பேரை திருமணம் செய்துள்ளார். இதில் ராணுவ வீரரிடம் லட்சக்கணக்கில் பணம், நகைகளை ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா (25). அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர்.

அப்போது சீனிவாஸ், திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் ரேணுகா கர்ப்பமானராம். ஆனால் சீனிவாஸ், ரேணுகாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இதையடுத்து பெரியவர்களால் பார்க்கப்பட்ட ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் சில நாட்கள் ரேணுகா மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து ஜெகதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளார்.

பின்னர் அவரை ரேணுகா திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான 3மாதங்களில் ரேணுகா, சீனிவாசை காதலித்து கர்ப்பமானது ஜெகதீசுக்கு தெரிய வந்தது. ஜெகதீஸ், ரேணுகாவை பிரிந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் ரேணுகாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வளர்க்க முடியாமல் திணறிய ரேணுகா தனது கர்ப்பத்திற்கு காரணமான சீனிவாசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்துள்ளார்.

3 marriage
3 marriage

அதற்கு சீனிவாஸ் குழந்தையை வளர்க்க பண தருவதாக கூறினார். மேலும் ரேணுகாவிடமிருந்து நிரந்தரமாக விடுபட சீனிவாஸ், ஒரு யோசனையை அவரிடம் தெரிவித்தார்.

அதாவது சீனிவாஸின் உறவினரான பிரசாத் ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவரது புகைப்படம் மற்றும் அவரது செல்போன் எண்ணை ரேணுகாவிடம் கொடுத்து பிரசாத்தை காதலிக்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து ரேணுகாவும் தனது காதலன் சீனிவாஸ் கூறியபடி ராணுவ வீரரான பிரசாத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அவரிடம் அடிக்கடி ஆசை ஆசையாக பேசி வந்துள்ளார்.

இதையடுத்து தனது காதல் வலையில் விழுந்த பிரசாத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பிரசாத், தான் ராணுவத்தில் பணி புரியும் லக்னோவிற்கு ரேணுகாவை அழைத்து சென்றார். அங்கு ரேணுகாவிற்கு பிரசாத் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.

சில மாதங்களில் பிரசாத்திடம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் தனக்கு வேலை கிடைத்து இருப்பதாக கூறி வந்துள்ளார். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பிரசாத், விசாகப்பட்டினத்திற்கு வர முடியவில்லை. போனில் மட்டும் தனது மனைவி ரேணுகாவிடம் பேசி வந்தார்.

அப்போது ரேணுகா தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். இதேபோன்று தாயாருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.45 லட்சம் செலவாகும் என டாக்டர் கூறியதாக பிரசாத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி பணத்தை பெற்று வந்த ரேணுகா, ஒருநாள் தனது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பிரசாத், தான் ராணுவத்தில் இருப்பதால் என்னால் வரமுடியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாய் என்ற இளைஞருடன் ரேணுகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 3வதாக திருமணம் செய்துள்ளார்.

கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் விசாகப்பட்டினம் வந்த பிரசாத்திற்கு ரேணுகா பற்றிய தகவல்கள் தெரிய வந்தது.

இதுகுறித்து காஜுவாக்கா போலீசில் பிரசாத் கொடுத்த புகாரில், என்னை திருமணம் செய்துகொண்ட ரேணுகா பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories