பெற்றோர் திட்டியதால் 50 அடி உயரத்திலிருந்து குதித்த நபர்! உயிர் பிழைத்த அதிசயம்!

man
man

வேலைக்கு செல்லாதது குறித்து பெற்றோர் திட்டியதால் இளைஞர் 50 அடி உயர தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்தும் உயிர் தப்பினார்.

ஈரோடு கலைவாணர் வீதி பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் குமரகிரி(35).

பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஊர் சுற்றி வந்துள்ளார். வேலைக்கு செல்லாததது குறித்து அவரது தாய் மற்றும் தந்தை திட்டியுள்ளனர்.

தொடர்ந்து இதுபோல் நடப்பதால் மனமுடைந்த குமரகிரி மது அருந்திவிட்டு பாரதி தியேட்டர் சாலையில் உள்ள 50 அடி உயர மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக சத்தமிட்டார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே குமரகிரி அங்கிருந்த கீழே குதித்தார். எனினும் உயிர் தப்பிய அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இளைஞர் தற்கொலைக்கு முயன்றது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர் உயிர் தப்பியது குறித்து அப்பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories