December 6, 2025, 11:59 AM
29 C
Chennai

பெற்றோர் திட்டியதால் 50 அடி உயரத்திலிருந்து குதித்த நபர்! உயிர் பிழைத்த அதிசயம்!

man
man

வேலைக்கு செல்லாதது குறித்து பெற்றோர் திட்டியதால் இளைஞர் 50 அடி உயர தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்தும் உயிர் தப்பினார்.

ஈரோடு கலைவாணர் வீதி பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் குமரகிரி(35).

பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஊர் சுற்றி வந்துள்ளார். வேலைக்கு செல்லாததது குறித்து அவரது தாய் மற்றும் தந்தை திட்டியுள்ளனர்.

தொடர்ந்து இதுபோல் நடப்பதால் மனமுடைந்த குமரகிரி மது அருந்திவிட்டு பாரதி தியேட்டர் சாலையில் உள்ள 50 அடி உயர மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக சத்தமிட்டார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே குமரகிரி அங்கிருந்த கீழே குதித்தார். எனினும் உயிர் தப்பிய அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இளைஞர் தற்கொலைக்கு முயன்றது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர் உயிர் தப்பியது குறித்து அப்பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories